புகழ்பெற்ற இசைத் தம்பதியினர் ரூபவாஹினி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்..

Read Time:3 Minute, 13 Second

புகழ்பெற்ற இசைத் தம்பதியரான தயாரட்ண ரணதுங்க மற்றும் அவரது துணைவி அமரா ரணதுங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்த ரூபவாஹினி நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டு அவர்கள் ரூபவாஹினியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஞாயிற்றுகிழமைகளில் காலை ஒன்பது மணிமுதல் பத்து மணிவரை நடைபெறும் நேரடி நிகழ்ச்சியான இரிதா ஆயுபோவன் நிகழ்ச்சியின் போதே இது இடம் பெற்றுள்ளது.நிகழ்ச்சி தொடங்கி 15 நிமிடம் சென்றிருக்கும் ரூபவாஹினி பணிப்பாளரின் விசேட உத்தரவின் கீழ் உடனடியாக நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு இவ்விருவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அங்கிருந்து வெளியேறிய ரணதுங்க தம்பதியினர் தாங்கள் தவறாக எதுவும் செய்துவிடவில்லை என்றும் அரசியல் குறித்து எதுவும் கலந்துரையாடவில்லை என்றும் இவ்வாறு நிகழ்ச்சியை இடைநடுவில் நிறுத்தி வெளியே அனுப்பியமைக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தனர். பின்னர் இந்நிகழ்ச்சியின் மீதி நேரத்தில் ஆளும் அரசை ஆதரித்துப் பாடப்பெற்ற ஓ எங்கள் மகாராஜாவே என்ற பாடல் உட்பட பல பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன. இது நிச்சயமாக அரசியல் சம்பந்தப்பட்டது தான் எனத் தெரிவித்த ரூபவாஹினி ஊழியர்கள் ஏற்கெனவே இர அந்துரு பத்த என்ற நிகழ்ச்சியும் சில காலத்திற்கு முன்னர் இவ்வாறு இடைநடுவில் நிறுத்தப்பட்டமையை நினைவு கூர்ந்தார்கள். இந்த நிகழ்ச்சி ரூபவாஹினியின் விசேட குழு ஒன்றினால் வடிவமைக்கப்படுவதே வழக்கம் என்றும் கடந்த வாரம்; இடம்பெற்ற நிகழ்ச்சியை அடுத்து ரூபவாஹினிப் பணிப்பாளர் இந்த விசேட குழுவினைக் கலைத்துவிடும்படி தெரிவித்திருந்ததாகவும், எனினும் அதற்குப் பதிலாகப் புதிய நிகழ்ச்சியை ஒழுங்கு செய்வதற்கோ அல்லது தயாரிப்பதற்கோ போதிய அவகாசம் இல்லாத காரணத்தினால் அந்த விசேட குழுவினரையே இவ்வார நிகழ்ச்சியையும் தயாரிக்கும்படி கேட்டிருந்ததாகவும், இதன்படி நிகழ்ச்சித் தயாரிப்புக்குப் பொறுப்பாக இருந்த இவ்விசேட குழுவினர் தயாரட்ண ரணதுங்கவையும்; அவரது துணைவி அமரா ரணதுங்கவையும் அழைத்திருந்தனர் எனவும் தெரிய வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “புகழ்பெற்ற இசைத் தம்பதியினர் ரூபவாஹினி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்..

  1. அதிகார போதை தலைக்கேறிவிட்டது. உச்சத்தில் நிற்கிறார்கள், வீழ்ந்து விட்டால் சுக்குநூறாவது நிச்சயம், உயரம் அதிகம் என்பதால்.

Leave a Reply

Previous post Wanni Operation Tamil VIDEO
Next post புலிகள் எனக்கூறி கப்பம் கோரியவர்கள் கைது