இராணுவக் கட்டளைப் பீடங்களில் மாற்றம்..

Read Time:1 Minute, 15 Second

வன்னி இராணுவக் கட்டளைப் பீடங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வன்னிக் களமுனையில் படை நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் 59வது படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடுவத்த, அநூராதபுரம் மாவட்ட கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன. 59வது படையணியின் கட்டளைத் தளபதியாக பிரிகேடியர் பிரசன்ன டி சில்வா நியமிக்கப்பட்டிருப்பதாகவும் படைத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன. இவரது கட்டளையின் கீழ் இயங்கிவந்த 55வது படையணியின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் சாகி கலகே நியமிக்கப் பட்டிருப்பதுடன், மேஜர் ஜெனரல் உபுல் பெரேரா இராணுவத்தின் பிரதி தலைமையதிகாரியாக நியமிக்கப் பட்டிருப்பதாகவும் படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை மீது ஷெல் தாக்குதல்: மக்களைக் காக்குமாறு ஆனந்தசங்கரி வேண்டுகோள்
Next post கரையாமுள்ளிவாய்க்கால் பகுதியில் தொடர்ந்தும் மோதல் -பிரிகேடியர் நாணயக்கார