தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் (ரிஎம்விபி) பலவந்தமாக இணைத்துக் கொள்ளப்பட்ட சிறுவர் போராளிகள் மீட்பு -திவயின தகவல்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினால் பலவந்தமான முறையில் ஆயுத பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்ட நான்கு சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த சிறுவர்களுக்கு ஆயுத பயிற்சிகளை வழங்கி தடுத்து வைத்திருந்த இரண்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலி (ரிஎம்விபி) உறுப்பினர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளால் குறித்த சிறுவர்களை கடத்திச் சென்று சித்திரவதைக்கு உட்படுத்திய பின்னர் ஆயுத பயிற்சி வழங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆயுத பயிற்சியை உரிய முறையில் பெற்றுக் கொள்ளாத காரணத்தால் கொடூரமான முறையில் குறித்த சிறுவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது திருகோணமலைகரடியனாறு மற்றும் கல்லடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சிறுவார்களே இவ்வாறு கடத்தப்பட்டு பலவந்தமான முறையில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக பிரபல சிங்கள பத்திரிக்கையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது
Average Rating