கரையாமுள்ளிவாய்க்கால் பகுதியில் தொடர்ந்தும் மோதல் -பிரிகேடியர் நாணயக்கார
Read Time:1 Minute, 12 Second
பாதுகாப்பு வலயத்திற்குள் பொதுமக்கள் சிக்கியுள்ள பகுதிக்கு சுமார் 150 மீற்றர் தொலைவில் நிலைகொண்டவாறு இராணுவத்தின் 58வது படையணியினர் தமது இராணுவ முன்னெடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர் இந்நிலையில் விடுதலைப்புலி உறுப்பினர்கள் அனைவரும் சுமார் 4சதுரகிலோ மீற்றர் நிலப்பரப்புக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இதேவேளை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கிய முன்நகர்வு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கரையாமுள்ளிவாய்க்கால் பகுதியில் தொடர்ந்தும் கடும்மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating