பாதுகாப்பு செயலரை இலக்கு வைத்த தாக்குதல் முயற்சி; பிரதான சந்தேக நபர் “கிளி” வவுனியாவில் கைது
Read Time:1 Minute, 0 Second
பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான ‘கிளி’ என்றழைக்கப்படும் தர்மலிங்கம் தர்மராதன் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இடம்பெயர்ந்து வரும் மக்களோடு மக்களாக வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கியிருந்த வேளையிலேயே இவர் படையினரால் நேற்று பகல் 12.40 மணியளவில் கைது செய்யப்பட்டதாக ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. படையினரால் கைது செய்யப்பட்ட இவர் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசா ரணைகள் நடத்தப்படுவதாகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
Average Rating