நான்கு தற்கொலைப் படகுகள், 15 தற்கொலைக் குண்டுதாரிகள் உள்ளிட்ட 200ற்கும் அதிகமான பயங்கரவாதிகள் சார்வார்தோட்டத்தில் படையினர்மீது தாக்குதல்
Read Time:1 Minute, 14 Second
அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்ட முல்லைத்தீவின் பாதுகாப்பு வலயத்தைச் சேர்ந்த சர்வார்தோட்டம் பகுதியை மீண்டும் புலிகள் மீட்பதற்கு மேற்கொண்ட முயற்சியை 59வது படைப்பிரிவினர் முறியடித்துள்ளனர். தற்கொலைக் குண்டுப் படகுகளைப் பயன்படுத்தி படையினரின் முன்னரங்கப் பகுதியை தகர்த்து அப்பகுதியைக் கைப்பற்றுவதற்கு பயங்கரவாதிகள் முயற்சித்துள்ளனர். படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் புலிகளின் மூன்று தற்கொலைப் படகுகள் அழிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு படகு கைப்பற்றப்பட்டுள்ளது. நான்கு தற்கொலைப் படகுகள், 15 தற்கொலைக் குண்டுதாரிகள் உள்ளிட்ட 200ற்கும் அதிகமான பயங்கரவாதிகள் இத்தாக்குதல் முயற்சியை நேற்றிரவு முதல் இன்று அதிகாலைவரை மேற்கொண்டிருந்ததாக படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
Average Rating