முல்லைத்தீவு வெடிப்பு சம்பவத்தில் செஞ்சிலுவைக்குழு பணியாளரும், தாயும் பலி
Read Time:53 Second
முல்லைத்தீவு மோதல் வலயப் பிரதேசத்தில் இன்றையதினம் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் ஒருவரும் அவரது தாயாரும் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இன்றுபகல் இடம்பெற்ற இந்த வெடிச் சம்பவத்திலேயே இருவரும் பலியாகியிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடகப் பணிப்பாளர் சரசி விஜேரட்ண தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலேயே மேற்படி வெடிப்புச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2 thoughts on “முல்லைத்தீவு வெடிப்பு சம்பவத்தில் செஞ்சிலுவைக்குழு பணியாளரும், தாயும் பலி”
Leave a Reply
You must be logged in to post a comment.
அவர்கள் ஆக்கள் என்றால் மனிதர்கள், மற்றெல்லாம் மரக்கட்டைகளா?
அதிலென்ன சந்தேகம் அன்பனே!
மர மண்டையனைத் தலைவர் என்பவரெல்லாம் மரக்கட்டைகளே!