நலன்புரி நிலையங்களில் உதவி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்,.. அரசாங்க ஊழியர்கள்
Read Time:1 Minute, 24 Second
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் அரசாங்க ஊழியர்களுக்கு அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நியமனங்களை வழங்கவேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கலாநிதி குமரகுருபரன் அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளார். உதவி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், முல்லைத்தீவு கல்விப் பணிப்பாளர், இலங்கை வங்கியின் மல்லாவிக் கிளை முகாமையாளர் ஆகியோர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் இருப்பதாகவும், இதற்கும் மேலதிகமாக மூன்று மிருக வைத்தியநிபுணர்களும் முகாம்களில் தங்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்த பின்னர் இவர்களுக்குத் தொழில் இன்மையால் பொருளாதார ரீதியிலான பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
Average Rating