நடிகர் பிரகாஷ்ராஜ் விவாகரத்து கோரி வழக்கு
Read Time:1 Minute, 6 Second
நடிகர் பிரகாஷ்ராஜ் விவாகரத்து கோரி சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜுக்கும், லலிதாகுமாரி என்பவருக்கும் 10 ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரியும், தனது குழந்தைகளைப் பார்க்க அனுமதிக்கக் கோரியும் பிரகாஷ் ராஜ் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக வரும் மே 26-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு லலிதா குமாரிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.
One thought on “நடிகர் பிரகாஷ்ராஜ் விவாகரத்து கோரி வழக்கு”
Leave a Reply
You must be logged in to post a comment.
முன்னாள் பிஸ்டல்குழு தலவன் தமிழ்செல்வனின் மனைவி கூட தன புதிய காதலனுடன் புது வாழ்வு அமைக்க ராணுவத்திடம் சரண் அடைந்து விட்டார்.