இராணுவத்தினரால் பிரபாகரன் சுற்றி வளைப்பு: கரையோரப் பகுதி முற்றாக விடுவிப்பு
இலங்கையின் மூன்று தசாப்த காலமாக எல்ரிரிஈ பயங்கரவாதிகளின் ஆழுமைக்குட்படுத்த பட்டிருந்த வடகரையோரத்தை இராணுவத்தின் 58வது, 59வது டிவிசன் படையினர் இன்று(மே:16)காலை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து முற்றாக விடுவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து எல்ரிரிஈ தலைவர் பிரபாகரன் மற்றும் பல தலைவர்களும் பதுங்கியிருக்கும் இடததை இராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர். கடந்த மூன்று தினங்களாக தென்கரையோரமாக நகர்ந்து வந்த 58வது டிவிசன் படையினர் இன்று காலை 59வது டிவிசன் படையணியினருடன் இணைந்துள்ளதாக முல்லைத்தீவிலிருந்து களநிலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 58வது டிவிசன் படையினர் இதன்போது 4300 சிவிலியன்களை மீட்டுள்ளனர்.இவர்களுள் பல எல்ரிரிஈசிரேஸ்ட தலைவர்களின் குடும்பத்தினர் மற்றும் பல எல்ரிரிஈ உறுப்பினர்களும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சரணடைந்த எல்ரிரிஈ உறுப்பினர்களிடையில் தற்கொலை உறுப்பினர்களும் அடங்குவதாக மேலும் தெரிவந்துள்ளது. இதேவேளை,நந்திக்கடல் தென் கரைஓரமா நகர்ந்த 53வது டிவிசன் படையினர் நேற்று 4550 சிவிலியன்களை விடுவித்துள்ளனர்.
One thought on “இராணுவத்தினரால் பிரபாகரன் சுற்றி வளைப்பு: கரையோரப் பகுதி முற்றாக விடுவிப்பு”
Leave a Reply
You must be logged in to post a comment.
நேற்று மதிவதனி பாலச்சந்திரன் உட்பட முக்கிய புலிகளின் குடும்பத்தவர் போலி அடையாள அட்டைகளுடன் இராணுவத்திடம் சரண் அடைந்து விட்டபோதும் இன்று இராணுவத்தினர் அவர்களை அடையாளம் கண்டு விட்டனர். ஞாயிறு காலை ராஜபக்சே பிரபாகரன் பிணமான செய்தியை தெரிவிக்க இருப்பதாக இங்கே சொல்லப்படுகிறது.
இந்திய தீர்வை இருபது வருடத்திற்கு முன்னர் ஏற்றிருந்தால் முப்பதாயிரம் புலிகள் மாவீரர்கள் என்று மாய்ந்திருக்க வேண்டியதில்லை. கிளிநொச்சி பிடிபட்டதோடு யுத்த நிறுத்தம் அறிவித்திருந்தால் வன்னி மக்கள் இவ்வளவு இழப்புகளையும் அவலங்களையும் சந்ததித்திருக்க வேண்டி வந்திருக்காது.
அரசியல் சூனியங்களை அறிவு கெட்ட முழு முட்டாள்களை புளுகு புளுகு என்று புளுகி இந்தா பண்ணப் போகிறான் படைக்கப் போகிறான் என்று பிலிம் காட்டி கடைசியில் கண்டது என்ன
பங்கருக்குள் பாவாடையோடு படுத்துகிடந்த பேடி பிணமானதும் இன்னமும் புலி வாலுகள் அகபட்டதை சுருட்டி கொண்ட பின்னர் அரசாங்கம் அறிவித்த பின் தாமும் பிரபா பிணமானதை அறிவிக்க உள்ளார்கள்.
இனியாவது அரசியல் பிழைப்பு நடத்தும் நரியர்களை நம்பாது ஒன்றுபட்டு முன்னேறுவோம்.