புலிகளின் பாடல்கள் பாடி புகழ் பெற்ற சாந்தன் கைது; பிரபாகரன் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ளார்: சூசையின் மனைவி

Read Time:1 Minute, 48 Second

முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்று (மே 15) காலை கைது செய்யப்பட்ட சூசையின் மனைவி, இரு பிள்ளைகள் உட்பட 11 பேர் புல்மோட்டையில் உள்ள கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு நடந்த விசாரணையில், ’’பிரபாகரன், பொட்டு அம்மான், எனது கணவர் சூசை உட்பட பல புலிகளின் முக்கிய தலைவர்கள் இன்னும் முள்ளிவாய்க்கால் பகுதியில்தான் இருக்கிறார்கள்’’ என சூசையின் மனைவி சத்தியதேவி தெரிவித்துள்ளார். இவருடன் கைது செய்யப்பட்ட மொத்தம் 11 பேரில் இவரின் நெருங்கிய உறவினர்கள் ஐவரை தவிர மற்றவர்களில் ஒருவர் புலிகளின் கப்பல் மாலுமி ஆவார். இன்னொருவர் புலிகளின் பாடல்கள் பாடி புகழ் பெற்ற சாந்தன் ஆகும். 1982ம் ஆண்டு நவம்பர் 27ம் திகதி புலிகள் அமைப்பில் முதல் மறைந்த போராளியும் புலிகளின் மாவீரர் நாள் நவம்பர் 27க்கு காரண கர்த்தாவுமான உடுப்பிட்டி, கம்பர்மலையை சேர்ந்த சங்கர் என்றழைக்கப்படும் செ.சத்தியநாதன் என்பவரின் சகோதரியே சூசையின் மனைவி சத்தியதேவியாகும். அத்துடன், படையினரிடம் சரணடைந்த புலிகளின் வைத்தியரான சுசிதரன் கடந்த 10ம் (மே) திகதி முள்ளிவாய்க்கால் பகுதியில் பிரபாகரனை தான் கண்டதாக தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

6 thoughts on “புலிகளின் பாடல்கள் பாடி புகழ் பெற்ற சாந்தன் கைது; பிரபாகரன் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ளார்: சூசையின் மனைவி

  1. புதிய சரிதம் எழுதிட புலிகள் பாய்ந்தனர்……………..

  2. நேற்று மதிவதனி பாலச்சந்திரன் உட்பட முக்கிய புலிகளின் குடும்பத்தவர் போலி அடையாள அட்டைகளுடன் இராணுவத்திடம் சரண் அடைந்து விட்டபோதும் இன்று இராணுவத்தினர் அவர்களை அடையாளம் கண்டு விட்டனர். ஞாயிறு காலை ராஜபக்சே பிரபாகரன் பிணமான செய்தியை தெரிவிக்க இருப்பதாக இங்கே சொல்லப்படுகிறது.
    இந்திய தீர்வை இருபது வருடத்திற்கு முன்னர் ஏற்றிருந்தால் முப்பதாயிரம் புலிகள் மாவீரர்கள் என்று மாய்ந்திருக்க வேண்டியதில்லை. கிளிநொச்சி பிடிபட்டதோடு யுத்த நிறுத்தம் அறிவித்திருந்தால் வன்னி மக்கள் இவ்வளவு இழப்புகளையும் அவலங்களையும் சந்ததித்திருக்க வேண்டி வந்திருக்காது.
    அரசியல் சூனியங்களை அறிவு கெட்ட முழு முட்டாள்களை புளுகு புளுகு என்று புளுகி இந்தா பண்ணப் போகிறான் படைக்கப் போகிறான் என்று பிலிம் காட்டி கடைசியில் கண்டது என்ன
    பங்கருக்குள் பாவாடையோடு படுத்துகிடந்த பேடி பிணமானதும் இன்னமும் புலி வாலுகள் அகபட்டதை சுருட்டி கொண்ட பின்னர் அரசாங்கம் அறிவித்த பின் தாமும் பிரபா பிணமானதை அறிவிக்க உள்ளார்கள்.
    இனியாவது அரசியல் பிழைப்பு நடத்தும் நரியர்களை நம்பாது ஒன்றுபட்டு முன்னேறுவோம்.

  3. தேவை இல்லா விமர்சனத்தை விட்டு தள்ளி தமிழ் இனத்தை நேசிப்போமாக ……..

  4. The Killer of Tamil people, innocent sinhales and Tamil speaking North East Muslim MUST kill.

  5. புலிகளோ யுத்தம் இல்லாத போது மக்கள் சலிப்படைந்து போவார்கள் என்றும் போராளிகள் மன மாற்றம் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் அடுத்த இயக்கத்தவரையாவது போட்டுத் தள்ளுவதில் ஊக்கம் கொடுத்து. அந்த போர் மூடில் போராளிகளை வைத்திருக்க முயன்றார்கள்.சொறிந்தவன் கை சும்மா இருக்காது என்பது போல போரையும் வலிந்து தொடுத்தனர்.
    புலிகளது ஆயுதத்துக்கு பயந்தே புலி வாலை விட முடியாமல் அநேகர் இருந்தனர்அவர்கள் 30 வருடத்தில் பட்ட துன்பம் ஏராளம். ஆனால் அதுக்கு அவர்களுக்கு பட்டதோஅல்லது கிடைத்த நின்மதியோ ஒரு துளி கூட கிடையாது. ஆயுதம் மக்களின் உனர்வுகளையும் உரிமைகளையும் அடக்கியதே தவிர, அதை மக்களுக்கு எதுவும் பெற்று தரவில்லை. இறுதி நேரத்தில் கூட மக்களில் எந்தவித அக்கறையும் இல்லாமல் ஆயுதத்தை காப்பாற்றவே புலிகளின் வியாபாரிகள் உலகம் முளுவதும் ஓலமிட்டனர்.
    யுத்தத்தின் பின் சமாதானம் இப்படியும் வரும்? அமெரிக்க ஜப்பான் போரின் பின்னும் , ஜெர்மன் ஐரோப்பிய போரின் பின்னும் சமாதானம் வந்தது. அங்கே வாழும் மக்கள் வெறுத்து விட்டால் அடுத்தவரால் ஒன்றும் செய்ய முடியாது. இன்று ஜேவீபீ மற்றொரு புரட்சிக்குத் தயாரில்லை. இலங்கை வாழ் தமிழரும் இன்னொரு இழப்புக்கு தயாரில்லை.

    பிற்குறிப்பு
    முன்னாள் பிஸ்டல்குழு தலவன் தமிழ்செல்வனின் மனைவி கூட தன புதிய காதலனுடன் புது வாழ்வு அமைக்க ராணுவத்திடம் சரண் அடைந்து விட்டார்.

  6. தமிழ் இனத்தை உண்மையாக நேசிப்பது யார் எண்டு இப்பவாவது புரிந்து கொள்ளுங்கள்…

    புலிக்கொடியும்…வீ வான்ட் தமிழ் ஈழம் அவர் லீடர் பிரபகாரன் எண்டு கத்தியும் இவர்கள் தான் உலகத்தை எம் மீது இரக்கப்படாமல் செய்தார்கள்..

    மக்கள் பலியாவதை முன் நிறுத்தி… இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் நாங்களும் வருவோம்.. ஏன் சிங்களவரும் வந்தாலும் ஆச்சர்யப்பட முடியாது….

    மனதை தொட்டு கேட்டு விட்டு உங்கள் மனம் சொல்வது போல செய்யுங்கள்.. புலி முகவர்கள் புலிகளை காப்பாத்தவே இவ்வளவு ஆர்ப்பாட்டமும் செய்தார்கள்…
    இனியாவது மக்களை காப்பாத்த போராடுவோம்… புலிகொடிகளை தவிருங்கள்…வசனங்களை மாற்றுங்கள்… உலகம் நம்மை திரும்பி பார்க்கும்…

Leave a Reply

Previous post இராணுவத்தினரால் பிரபாகரன் சுற்றி வளைப்பு: கரையோரப் பகுதி முற்றாக விடுவிப்பு
Next post விருதுநகரில் காங். வெற்றி – 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் வைகோ தோல்வி