நெதர்லாந்து, இலங்கைத் தூதரகத்தின் மீது மீண்டும் தாக்குதல்
Read Time:1 Minute, 5 Second
நெதர்லாந்தின் ஹேக் நகரிலிருக்கும் இலங்கைத் தூதரகத்தின் மீது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு தூதரகத்தின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்தியிருப்பதாக தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சு, இதனையடுத்து, தூதரகத்தின் மீது தீபற்றிக்கொண்டதுடன், இதனை நெதர்லாந்துப் பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகவும் குறிப்பிட்டது. நெதர்லாந்தின் ஹேக் நகரிலிருக்கும் இலங்கைத் தூதரகத்தின் மீது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவென வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
Average Rating