விடுதலைப்புலிகளை முற்றாக தோற்கடித்து விட்டதாக ஜனாதிபதி தெரிவிப்பு
26வருட உள்நாட்டுப் போருக்கு பின்னர் விடுதலைப் புலிகளை தமது இராணுவம் முற்றாக தோல்வியடையச் செய்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜோர்தானுக்கு விஜயம் செய்துள்ள அவர் விடுதலைப்புலிகளின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் இருந்து விடுதலைப்பெற்ற ஒருநாட்டுக்கு தான் நாளை திரும்புவேன் என்று கூறியுள்ளார். முன்னதாக பிபிசிக்கு செவ்வி வழங்கிய பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்னமும் ஒரு சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் விடுதலைப்புலிகள் ஒடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அந்தப்பகுதியில் விரைவில் கைப்பற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அந்தப்பகுதியும் விரைவில் கைப்பற்றப்படும் என்று அவர் கூறினார். ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் இதற்கிடையே போரினால் அகதியாகியுள்ள மக்களிடம் சென்று உதவுவதற்கு மனிதாபிமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்காவிட்டால் அதன் பலனை எதிர்கொள்ள நேரிடும் என பிரிட்டிஷ் பிரதமர் எச்சரித்திருக்கிறார்.
Average Rating