பிரபாகரன் தற்கொலை-ராணுவம் கூறுகிறது: உடல் மீட்கப்பட்டதாக தகவல்!!

Read Time:2 Minute, 20 Second

lttepiraba-003விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும் அவரது உடல் கொழும்பில் உள்ள பனகொடா ராணுவ முகாமுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் இலங்கை ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இத்தகவலை இதுவரை இலங்கை அரசும், பாதுகாப்புத்துறையும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால் இன்று மாலை இலங்கை அதிபர் ராஜபக்சே தொலைக்காட்சி மூலம் இத்தகவலைத் தெரிவிக்கக் கூடும் என கூறப்படுகிறது. புலிகள் தலைவர்கள், பிரபாகரனுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் 150 பேர் 2 நாட்களுக்கு முன் ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொண்டதாகவும், அந்த உடல்களில் ஒன்று பிரபாகரனுடையதாக இருக்கலாம் என்றும் ராணுவம் கூறியுள்ளது. உடலை அடையாளம் காண்பதற்காக அது கொழும்புவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ராணுவம் கூறியுள்ளது. இதற்கிடையே இலங்கை செய்தித்துறை அமைச்சர் அணுரா யபா சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி்க்கு அளித்த பேட்டியில், இந்தச் செய்தியை நாங்கள் இப்போது உறுதிப்படுத்த முடியாது. ஒரு உடல் சிக்கியுள்ளது. அந்த உடலை அடையாளம் காண வேண்டியுள்ளது. அதன் பின்னரே இதை உறுதிப்படுத்துவோம் என்றார். ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி அதே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இரு தினங்களுக்கு விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவின் தலைவர் சூசை குடும்பத்தினர் ராணுவத்திடம் பிடிபட்டனர். அவர்கள் அளித்த தகவலின்படி 2 நாட்களுக்கு முன் 150 புலித் தலைவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்துள்ளது என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

16 thoughts on “பிரபாகரன் தற்கொலை-ராணுவம் கூறுகிறது: உடல் மீட்கப்பட்டதாக தகவல்!!

  1. ஐயோ, அப்ப அவன் உயிரோட பிடிபடலேயா?

  2. எமக்கென ஒரு நாடு பிறப்பது உறுதி அதுவரை சிங்களவன் நிம்மதி பறப்பதும் உறுதி

  3. தங்கள் கனவுகளைத் துறந்து தாயகக் கனவுகளை நெஞ்சில் சுமந்து வெங்கொடுமைக் களம் ஆடி தங்கள் குருதியால் தமிழிழ மண்னணச் செம்புலமாக்கி நடுகல்லான வேங்கைகளுக்கு எம் வீர வணக்கங்கள்!

  4. கடவுளை கண்டவன் எவனுமில்லை பிரபாகரனை வென்றவென் எவனுமில்லை

  5. இவங்களும் பிரபாவை கண்டிருக்க மாட்டாங்கள். பிரபாவுக்கும் இவங்களைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. கடவுளும் எங்களைப் பார்த்ததில்லை…

    கொலைகாரனைக் கடவுள் என்றால்… அவன் ஒரு கொலைகாரக் கடவுள்!

  6. தலைவர் இருக்கிறார் என்றுமே புலிகள் தான் எங்கட தலைமை. ஒட்டுண்ணிகள் எல்லாம் வீண் பேச்சு பேசி பயன் இல்லை….. ஒட்டுண்ணிகள் எங்கட தலைமை ஆகாது….

  7. நம்புங்கள் நாளை தமிழ் ஈழம் பிறக்கும் !!!
    தந்துதவுங்கள் பை நிறைய இன்று !!!!!!!
    நம்புங்கள் நாளை தமிழ் ஈழம் பிறக்கும்?????

  8. மானமுள்ள தமிழனுக்கு மரணம் ஒரு கால் தூசி

    சிங்களவன் கால் பிடித்து வாழ்பவனுக்கு அதுவே

    வாழ்நாள் பயம்..

  9. Sinhalese are united and you Tamil people are not united. That’s why some of these websites are just carrying the news from the srilankan government sources. Until you have this division you will never get something from other governments. Just check each news published on this side. One of the article says mr.p committed suicide and army found the body the other says most of the high ranked ltte were in one building and it is distroyed and they suspect mr.p was there. Which one is true? Either the editor is an idiot who f…… doesn’t know what he is writing

  10. What? Prabakaran is your god?? Please don’t compare him with god because, this is a disgrace!!
    Prabakaran is an idiot and a very bad human!

  11. நீதிபதி சமரி டனன்சுரியவின் கட்டளைப்படி அனுராதபுர வைத்தியசாலையில் பிரபாகரனின் பிணத்தை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். புலித் தலைவன் பிரபாகரனின் தலையுக்குள் வெறும் வெடிமருந்து மட்டும்தான் இருந்ததாம்

  12. நீதிபதி சமரி டனன்சுரியவின் கட்டளைப்படி அனுராதபுர வைத்தியசாலையில் சுப்ரமணியம் ரவிச்சந்திரன் பிணத்தை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். புலைவன் சுப்ரமணியம் ரவிச்சந்திரனின் தலையுக்குள் வெறும் வெடி மட்டும்தான் இருந்ததாம்

Leave a Reply

Previous post மயிலம்பாவெளியில் 4இளைஞர்கள் வெடிபொருட்களுடன் கைது!
Next post ஈழப் போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது -விடுதலைப் புலிகள்