ஒரு சதுரகிலோ மீற்றருக்கு குறைவான பகுதிகளுக்குள் விடுதலைப் புலிகள் முடக்கம்..
Read Time:1 Minute, 14 Second
வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலிகளிடம் சிக்கியிருந்த சிவிலியன்களை முற்றாக விடுவித்த இராணுவத்தினர் 400க்கு 600 மீற்றர் சதுரத்துக்குள் விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை தற்போது முடக்கியுள்ளதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 72மணித்தியாலயங்களுக்குள் 50,000க்கம் அதிகமான சிவிலியன்களை விடுதலைப் புலிகளிகளிடமிருந்து விடுவித்துள்ளதாகவும் இதன்போது முன்பு புலிகளால் கைது செய்யப்பட்டிருந்த நான்கு கடற்படையினர் மூன்று இராணுவத்தினரையும் படையினர் விடுவித்துள்ளதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான கடும் தாக்குதல் தொடர்ந்த வண்ணமே உள்ளதாக மேலும் தெரிவித்தார்.
One thought on “ஒரு சதுரகிலோ மீற்றருக்கு குறைவான பகுதிகளுக்குள் விடுதலைப் புலிகள் முடக்கம்..”
Leave a Reply
You must be logged in to post a comment.
தற்போது கடைசி மணித்தியால தாக்குதல் நடந்துகொண்டிருக்குது… நிறைய சனம் செத்துக்கொண்டிருக்கு, 2X2 கிலோமீற்ரர் அகலமான எங்களுடய துண்டுக்குள்ளே… (துண்டு எனக் குறிப்பிடப்படுவது புலிகளின் பாஷையில் “தமிழீழம்”). எல்லா இடங்களிலும் பிணக்குவியல்கள். (இதனைத்தானே புலி எதிபார்த்தது). நேற்று மக்களைக் கேட்டனாங்கள், ரெட் குரொஸ் மூலமா எடுக்கச்சொல்லி… ஆனால் கேட்கேல்லை. எல்லாம் செத்திட்டுது. (புலியின் விருப்பமும் அதுதானே) சண்டை மோசமாக நடக்குது (தமிழீழம் சும்மா கிடைக்காதுதானே). ஆட்லறி பரவலாக எங்கட துண்டுக்குள்ளே அடிச்சுக்கொண்டிருக்கினம். (குண்டுச் சத்தங்கள் ஏதுவும் பின்புலத்தில் கேட்கவில்லை) சனம் செத்துக்கொண்டிருக்கு. சண்டை முனையில நாங்கள் தொடரா சண்டை பிடிச்சுக்கொண்டிருக்கிறம் (உங்கள் தலைவிதி). கடைசிவரைக்கும் அடிபணிய மாட்டம்.(அடி பணிஞ்சப்போல… புலன்பெயர் தமிழர் விட்டிடுவாங்களா? உங்களை மாவீரராக்கிப் பார்ககிறதுதானே அவர்களின் சந்தோஷம்) சர்வதேசம் திரும்பிப் பார்க்கேல்லை என மனைவி பிள்ளைகளைப் பாதுகாப்பாக இராணுவத்திடம் அனுப்பிவிட்ட புலி,
படுகாயமடைந்த 25 ஆயிரம் தமிழர்கள் மருத்துவ பராமரிப்பு இல்லாமல் பரிதாப மரணம்:
குளத்தில் இருந்து சூசை தகவல்