படையினரின் முற்றுகை இறுகியது; நாடளாவிய ரீதியில் கொண்டாட்டங்கள்..

Read Time:1 Minute, 36 Second

வன்னியில் இன்னமும் புலிகளின் பிடியிலிருக்கும் பகுதிகள் மீது படையினரின் பிடி மேலும் இறுக்கப்பட்டிருப்பதாக படைத்தரப்பு கூறியுள்ளது. 400 ஓ 600 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் இப்போது விடுதலைப் புலிகள் முற்றுகையிடப்பட்டிருப்பதாக அது தகவல் வெளியிட்டுள்ளது. இதேவேளை, இலங்கை முழுவதும் பல பகுதிகளிலும் வெற்றிக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எங்கும் தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டு வெடி கொளுத்தி ஆரவாரம் செய்யப்படுகிறது. தலைநகர் கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பிரதேசங்களில் அதிகளவு தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டு ஆயிரக்கணக்கில் வெடிகள் கொளுத்தப்பட்டன. பாதுகாப்பு வலயப் பிரதேசத்துக்குள் சிக்கியிருந்த 50,000 க்கும் அதிகமான பொதுமக்கள் கடந்த இரண்டு தினங்களில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள படைத்தரப்பினர், வெகு விரையில் புலிகளின் கதை முடிந்துவிடும் என்று அறிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபாகரனின் எந்தத் தடயமும் இல்லை; புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டனர்?
Next post பிரபாகரன் என்ன ஆனார்???