’33’: முடிவை அன்றே உணர்ந்தாரா பிரபாகரன்?
விடுதலைப் புலிகளின் கொடியை உற்று நோக்குவோருக்கு ஒரு ஆச்சரியம் தெரியும். கொடியில் இடம் பெற்றுள்ள தோட்டாக்களின் எண்ணிக்கை 33. புலிகள் இயக்கத்தின் போராட்டம் முடிவுக்கு வந்திருப்பதும் 33 ஆண்டுகளில் என்பது வியப்புக்குரிய ஒற்றுமை. விடுதலைப் புலிகளின் கொடி செந்நிறத்திலானது. இரு துப்பாக்கிகள் குறுக்கும் மறுக்குமாக இருக்க, நடுவே கம்பீரமான புலி ஒன்று படுத்திருக்கும். சுற்றிலும் தோட்டாக்கள் அணிவகுத்திருக்கும். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியில் உள்ள தோட்டாக்கள் எண்ணிக்கை 33. விடுதலைப் புலிகள் இயக்கம் தொடங்கப்பட்டு 33 ஆண்டுகள் ஆகிறது. அவர்களின் தனி ஈழப் போராட்டம் முடிவுக்கு வந்திருப்பதும் 33 ஆண்டுகளில்தான். 33 ஆண்டுகளில் ஈழம் மலரும் என்ற நம்பிக்கையில் அந்தக் கொடியில் 33 தோட்டாக்களை பிரபாகரன் பதித்தார் என்று கூறுவோர் உண்டு. ஆனால் ஈழப் போராட்டம் 33 ஆண்டுகளில் பலன் ஏதும் இல்லாமல் முடிந்து போய் விட்டது குறிப்பிடத்தக்கது.
3 thoughts on “’33’: முடிவை அன்றே உணர்ந்தாரா பிரபாகரன்?”
Leave a Reply
You must be logged in to post a comment.
33 ஆண்டுகள் ஆகிவிட்டனஆனால் ஆண்டும் முடியவில்லை போராட்டமும் முடியவில்லை… பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.. தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்…. தமிழன் உள்ளவரை போராட்டம் துடரும்….
இனிமேல்தான் போரட்டமே ஆரம்பம். இவ்வளவு
நாளும் நடந்தது வெறும் ஒத்திகை மட்டுமே! ஆனால்
இவ்வளவு உயிர்களை பலி கொடுத்தது மிக மிக
வேதனை. இனி ஈழத்தமிழன் ஏமாறமாட்டான்.
உலகத்தில் உள்ள அத்தனை துரோகிகளையும் இந்த
33 வருடகாலப் போராட்டத்தில் அடையாளம் கண்டு
கொணடான்..
கடந்த 30 வருட காலமாக கட்டி வளர்த்து ஆகாயப்படை, தரைப்படை, கடற்படை அனைத்தையும் உருவாக்கி எதையும் சாதிக்க முடியாமல் மக்களையும் அழித்து தாங்களும் அழிந்து மீண்டும் ஈழத்தை பிடித்து தரப்போகிறார்கள் என்பதை மக்கள் நம்புகிறார்கள் என்றால் அவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.