கனகரத்னம் எம்பியின் நிலை குறித்து கூட்டமைப்பு கேள்வி

Read Time:1 Minute, 26 Second

மோதல்ப் பகுதியில் அகப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தின் நிலை குறித்து அறியத்தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டாரவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம் கடந்த ஒருவார காலத்துக்கு முன்னர் தம்முடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டிருந்ததுடன், அதன் பின்னர் அவருக்கும் தமக்குமிடையிலான தொடர்புகள் துண்டிக்கப் பட்டதாகக் கூட்டமைப்பினர் சுட்டிக் காட்டியுள்ளனர். எனவே, பாராளுமன்ற உறுப்பினர் கனகரட்ணத்தை மீட்டுத்தரவேண்டும் அல்லது அவர் குறித்த உண்மை நிலைவரத்தை தமக்கு அறியத்தரவேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சபாநாயகருக்க அனுப்பியுள்ள கடிதத்தில் கோரியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நந்திக்கடல் பகுதியில் பிரபாகரன் உடல் புதைப்பு!
Next post லண்டனில் போராட்டம்-10 தமிழர்கள் கைது