இலங்கை தமிழ் எம்.பி பத்மநாபன் மதுரையில் மரணம்
Read Time:50 Second
இலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்.பி. கனகசபை பத்மநாபன் மதுரையில் மாரடைப்பால் மரணமடைந்தார். இலங்கையைச் சேர்ந்த எம்.பி. பத்மநாபனுக்கு மதுரையில் உள்ள திருநகரில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. தமிழகம் வந்தால் இந்த வீட்டில்தான் தங்குவது வழக்கம். மதுரையில் நடந்த திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் மதுரை வந்திருந்தார். நேற்று திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் பத்மநாபன் மரணமடைந்தார்.
Average Rating