13வயது சிறுமி மீது வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனை
பதின்மூன்று வயது பாடசாலை சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் குற்றவாளியாக காணப்பட்ட ஒருநபருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனையும் 2500ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது இதேவேளை பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு 75ஆயிரம்ரூபா நஷ்டயீடும் வழங்கப்படவேண்டுமெனவும் அபராதத்தொகை செலுத்தப்படாதவிடத்து மேலும் ஓராண்டு சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டுமெனவும் கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.எம் கப+ர் தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் கம்பஹா இம்புல்கொடவைச்சேர்ந்தவரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான 46வயதுடைய துடுகல தென்னகோன் முதலிகே டட்லிதென்னகோன் என்பவர் மீதே பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது கடவத்த பொலிஸ் பிரிவில் உள்ள கிரில்லவல எனும் இடத்தில் 2001ம் திகதி இவர் பராயமடையாத சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருந்தமை குறிப்பிடதக்கது.
Average Rating