கொலைக் குற்றச்சாட்டில் இராணுவ வீரர் கைது
Read Time:1 Minute, 13 Second
மாவரல்ல தொட்டுவ குடியிருப்பைச் சேர்ந்த மோட்டார் மெக்கானிக் ஒருவர் கடந்த சனிக்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சின்னாகந்தகே சோமசந்திர எனும் 34வயது நபரே கொலை செய்யப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது இவர் கத்திக்குத்து நடந்த ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது இக்கொலை தொடர்பில் மாவரல்ல பொலிஸார் சந்தேகத்தின் பேரி;ல் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய கிறிஸ் கத்தியொன்றையும் கைப்பற்றியுள்ளனர். இருதரப்புக்கும் இடையில் நிலவிய தகராறே இவ்வாறு கொலைக்கு காரணம் எனத் தெரிவித்துள்ள அதேவேளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating