பிரபாகரன் மரணம்:- அதிர்ச்சியில் அண்ணன் குடும்பம்

Read Time:3 Minute, 25 Second

டிவியில் காட்டப்பட்ட உடலைப் பார்த்தபோது அது பிரபாகரனுடையதாகவே எங்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் அவர் இறந்து விட்டார் என்பதை எங்களால் நம்ப முடியவில்ல என்று டென்மார்க்கில் வசிக்கும் பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் தெரிவித்துள்ளார். பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் தனது குடும்பத்துடன் டென்மார்க் நாட்டின், வெஜ்லே என்ற இடத்தில் வசித்து வருகிறார். அதேபோல, ஹெர்னிங் என்ற இடத்திலும் பிரபாகரனின் உறவினர் குடும்பம் உள்ளது. பிரபாகரன் மரணச் செய்தி குறித்து கார்த்திக் மனோகரன் குடும்பத்தினர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். வீடியோவில் காட்டப்பட்ட உடல் பிரபாகரனுடையது போலவே இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதை முழுமையாக அவர்கள் நம்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மனோகரன் கூறுகையில், இலங்கை டிவியில் காட்டப்பட்ட படத்தைப் பார்த்தபோது எனது தாயார் கதறி அழத் தொடங்கி விட்டார். முகத்தைப் பார்த்தபோது அது நிச்சயமாக அவருடைய முகம் போலவே இருக்கிறது. அவருடைய கண்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை, மிகப் பெரிய கண்கள் அவை. ஆனால் எங்களால் பிரபாகரன் இறந்து விட்டார் என்பதை நம்ப முடியவில்லை. அதை எங்களால் ஏற்கவும் முடியவில்லை. எப்படி எடுத்துக் கொள்வது என்றும் புரியவில்லை.

அவருடைய முகத்தை மட்டுமே காட்டினார்கள். கிராபிக்ஸ் மூலம் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது என்றார் அவர்.

பிரபாகரன் குடும்பத்திருக்கும், தங்களுக்கும் இடையே கிட்டத்தட்ட 3 மாதங்களாக எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் மனோகரன் தெரிவித்துள்ளார்.

எனது பாட்டி (பிரபாகரனின் தாயார்) அதிக தூரம் நடக்க முடியாதவர். சில நேரங்களில் பொது தொலைபேசியிலிருந்து எங்களுடன் பேசுவார். சில வேளைகளில் நாங்கள் வீட்டில் இல்லாவிட்டால் அவருடன் பேச முடியாமல் போய் விடும்.

இந்த நிமிடத்தில் எனது தாத்தா, பாட்டி ஆகியோர் என்ன ஆனார்கள், எங்கு இருக்கிறார்கள் என்ற விவரம் எங்களுக்குத் தெரியவில்லை என்றார் மனோகரன்.

எனது தாத்தா, பாட்டி, சித்தப்பா மற்றும் குடும்பத்தினர் நிலை குறித்து இலங்கை யிலிருந்து ஏதாவது செய்தி வரும் என நாங்கள் காத்திருக்கிறோம் என்றார் அவர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

4 thoughts on “பிரபாகரன் மரணம்:- அதிர்ச்சியில் அண்ணன் குடும்பம்

  1. What else Nitharsanam expects? They are going to have a party like you?

    Respect the feelings of individuals.

  2. மனோகரன், உங் கள் சித்தப்பா (பிரபாகரன்) மற்றும் குடும்பத்தினர் இறந்து விட்டார்கள்.

    It’s a happy news.

  3. எங்கட பிள்ளைகள் உயிரை பயணம் வைத்து சண்டை பிடிக்கும்போது தலைவேர்கள் கண்ணாடி பார்த்து கவனமாக சவரம் செய்து கொண்டிருந்தனர்.

    எங்கட பிள்ளைகள் எதிரியிடம் பிடிபடுவோம் என தெரிந்த போது சயநைட் குப்பியை கடித்தனர். எதிரி சுற்றி வளைத்ததும் தலைவேர்கள் தம் உயிரை காக்க சயநைட் குப்பியை ஏறிந்துவிட்டு எதிரியிடம் சரண் அடைந்தார்

    கோழைத் துரோகிகள் ஒரு அஞ்சலி கூட இல்லாது எரிந்து சாம்பலாகி விட்டார்கள்

    எங்க பிள்ளைகள் தான் உண்மையில் மாவீரர்.
    சரண் அடைந்த தலைவேர்கள் கொலைகார கோழை துரோகிகள்

  4. புலிகளது சரி – தவறுகள் எதுவானாலும் பிரபாகரன் சடலத்தை புலிகளது ஆசீர்வாதத்தோடு வாழ்கை நடத்திய TNAயாவது(தமிழ் தேசிய கூட்டமைப்பு) பெற்று இறுதி மரியாதையை செய்திருக்கலாம்.
    முடியாது என்று யாராலும் சொல்ல முடியாது. சதாம் குசைன் சடலத்தை பெற்று இறுதி கிரிகைகளை செய்ய முடிந்தது. நமது இனத்தில் வாய்ச் சவடால் விட்ட எவருமே வாய் திறக்காதது ஏன்?
    இறந்தது பிரபாகரன் இல்லை என்றால் , உடலத்தை பெற்று அது பிரபாகரனது இல்லை என்று உலகத்தின் முகத்தின் காட்டியிருக்கலாம்.
    அது அனைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடமையாக இருந்திருக்க வேண்டும். அவர் சாகவில்லை என்று அவரை அநாதையாக்கி எரிக்க சதிகாரர்களாக இருந்தவர்கள் துரோகிகளாகவே கருதுகிறேன்.
    பலரது சுயநல முகங்கள் இப்போது தெரிகின்றன.

Leave a Reply

Previous post பிரபாகரனின் இறப்புச் சான்றை அளிக்க இலங்கை உறுதி: எம்.கே.நாராயணன் தகவல்
Next post பிரபாகரனின் மரணத்தில் “நக்கீரன்” பத்திரிகை செய்திருக்கும் மிகப்பெரிய புகைப்பட மோசடி!!!