பிரபாகரன் மனைவி, மகள், மகன் இறப்பு: ராணுவம் மறுப்பு

Read Time:3 Minute, 21 Second

lttepiraba-familyபிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இரண்டாவது மகன் பாலசந்தரன் ஆகியோர் இறந்து விட்டதாகவும் அவர்களுடைய சடலங்கள் நந்திக்கடல் பகுதியில் கிடைத்ததாகவும் ராணுவம் தெரிவித்த தகவல்கள் உண்மையல்ல என்று பிரிகேடியர் உதய நாணயக்கார கொழும்பில் வியாழக்கிழமை தெரிவித்தார். இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் சரண் அடைந்து விட்டதாகவும் இயக்கத்தில் அவர்களுடைய பங்கு, அவர்களுக்குள்ள தொடர்பு, அவர்கள் சம்பந்தப்பட்ட தாக்குதல்கள் ஆகியவற்றை விசாரித்த பிறகு, அவர்கள் எல்லா தொடர்புகளையும் விட்டு விட்டார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் விடுதலை செய்து விடுவோம் என்றார் நாணயக்கார. ராணுவத்தின் 58-வது டிவிஷனிடம் சரண் அடைய வெள்ளைக் கொடியுடன் வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் நடேசன், பூலித்தேவன் ஆகியோரை ராணுவம் சுட்டுக்கொன்றுவிட்டதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்தார். தங்களிடம் முன்கூட்டியே பேசிவிட்டு சரண் அடைய அவர்கள் இருவரும் வரவில்லை என்றும் வெள்ளைக் கொடியுடன் யாரும் வரவில்லை என்றும் மறுத்தார். வெள்ளைக் கொடியுடன் சமாதானம் பேச வந்தவர்களைக் கொன்றது போர்க்குற்றம் என்று விடுதலைப் புலிகளின் வட்டாரமும் அவர்கள் மீது அனுதாபம் உள்ள வெளிநாட்டவர்களும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளிலும் ஐ.நா.விலும் புகார் செய்திருக்கின்றனர். தங்களால் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் அனைவரும் கடைசிவரை தங்களுடன் சண்டையிட்டதாகவும் தாங்களும் அவர்களுடன் கடுமையாகச் சண்டையிட்ட பிறகே கொன்றதாகவும் அவர் குறிப்பிட்டார். விடுதலைப்புலிகளுடன் கடந்த சில நாள்களாக நடக்கும் சண்டைகளில்கூட தங்களுக்குக் கணிசமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக் குறிப்பிட்ட நாணயக்கார அதை மேற்கொண்டு விவரிக்கவில்லை. பிரபாகரன் எப்படி இறந்தார்? என்று கேட்டதற்கு, இயந்திரத் துப்பாக்கிகளால் தங்கள் வீரர்கள் சுட்டபோது குண்டு பாய்ந்து இறந்தார் என்றார் நாணயக்கார. அவருடைய இடுப்பு பெல்ட்டில் நவீன துப்பாக்கி இருந்திருக்கிறது, அதை ஏன் அவர் பயன்படுத்தவில்லை என்று நிருபர்கள் கேட்டபோது, அவரைச் சுற்றி மெய்க்காவலர்கள் இருந்ததால் அவர் துப்பாக்கியை எடுத்திருக்க மாட்டார் என்றார் அவர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “பிரபாகரன் மனைவி, மகள், மகன் இறப்பு: ராணுவம் மறுப்பு

  1. எங்கட பிள்ளைகள் உயிரை பயணம் வைத்து சண்டை பிடிக்கும்போது தலைவேர்கள் கண்ணாடி பார்த்து கவனமாக சவரம் செய்து கொண்டிருந்தனர்.

    எங்கட பிள்ளைகள் எதிரியிடம் பிடிபடுவோம் என தெரிந்த போது சயநைட் குப்பியை கடித்தனர். எதிரி சுற்றி வளைத்ததும் தலைவேர்கள் தம் உயிரை காக்க சயநைட் குப்பியை ஏறிந்துவிட்டு எதிரியிடம் சரண் அடைந்தார்

    கோழைத் துரோகிகள் ஒரு அஞ்சலி கூட இல்லாது எரிந்து சாம்பலாகி விட்டார்கள்

    எங்க பிள்ளைகள் தான் உண்மையில் மாவீரர்.
    சரண் அடைந்த தலைவேர்கள் கொலைகார கோழை துரோகிகள்

Leave a Reply

Previous post கொலைக் குற்றச்சாட்டில் இராணுவ வீரர் கைது
Next post பிரபாகரனின் இறப்புச் சான்றை அளிக்க இலங்கை உறுதி: எம்.கே.நாராயணன் தகவல்