யாழ். குடாநாட்டில் உள்ள புலிகள் 48மணி நேரத்துள் படையினரிடம் சரணடைய வேண்டும் -யாழ். தளபதி வலியுறுத்தல்
யாழ். குடாநாட்டில் உள்ள புலி உறுப்பினர்கள் சகல வன்முறைகளையும் கைவிட்டு 48மணி நேரத்துள் படையினரிடம் சரணடைய வேண்டுமென யாழ். இராணுவத் தளபதி கேட்டுள்ளார். அதேவேளை புலி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை கொடுத்து உதவுவது தவறு என்றும் அவர்களை படையினரிடம் சரணடைய செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்யுமாறும் யாழ். இராணுவத்தளபதி பொதுமக்களைக் கேட்டுள்ளார். யாழ். மக்களின் சமாதான வாழ்க்கை நிலையை சீர்குலைக்க தயாராயிருக்கும் புலி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு மற்றும் தங்குமிட வசதிகள் உட்பட வேறு தேவைகளை நிறைவேற்ற உதவுவது தவறென பொதுமக்களுக்கு அறியத்தருவதுடன் அவாக்ள் உங்களின் உறவாக அல்லது நணர்பர்களாக இருந்தாலும் அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கிக் கொண்வதற்காக இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு தேiவாயன செயற்பாடுகளை செய்யுங்கள் எவ்வித பயம், சந்தேகமின்றி அவர்களை சரணடைய செய்ய உங்களால் முடியாவிட்டால் புலனாய்வுத் தகவலின்படி அவர்களை கைது செ;யயப்பட்டால் அவர்களுக்கு பாதுகாப்பளித்த குற்றவாளியாக நீங்களும் குற்றவாளியாக கருதப்படுவீர்கள் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.
2 thoughts on “யாழ். குடாநாட்டில் உள்ள புலிகள் 48மணி நேரத்துள் படையினரிடம் சரணடைய வேண்டும் -யாழ். தளபதி வலியுறுத்தல்”
Leave a Reply
You must be logged in to post a comment.
பிரபாவின் நிழலை கூட இராணுவம் நெருங்க முடியாது
எங்கட தலைவர் உள்ள விட்டும் வெளிய விட்டும் அடிப்பார்.
ஆனா அடிக்க மாட்டார்
நாளைக்கு அவர் எங்கெளுக்கெல்லாம் நல்ல வலி காட்டுவார்
ஆனா வழிகாட்ட மாட்டார்
நம்புங்கள் நாளை தமிழீழம் பிறக்கும்
தமிழ் தேசிய கூத்தமைப்பு தலைவரின் உடலை பொறுப்பேற்று சரியான முறையில் இறுதி நிகழ்வுகளை நடத்தி இருக்கலாம். அவர்கள் கூட ஆயிரக் கணக்கில் தமிழர் வந்து காறித்துப்பினால் என்ன ஆகும் என்று சொல்லி தலைவரை அநாதை மாதிரி அம்போ என்று கை விட்டுவிட்டார்கள்.
பக்கத்தில் ஒருவர் கூட இல்லாமல் தனியே தலைவரின் உடல் எரிந்து சாம்பலாகிவிட்டது
தலைவர் மீண்டும் உயிர்த்து வந்து தமிழ் தேசிய கூத்தமைப்பின் குடலை உருவுவார்
நம்புங்கள் நாளை தமிழ் ஈழம் பிறக்கும்.