திருமலை அரச அதிபராக இராணுவ அதிகாரி நியமனம்: புலிகள் எதிர்ப்பு
Read Time:46 Second
திருகோணமலை அரச அதிபராக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வாவை நியமித்துள்ளமைக்கு விடுதலைப் புலிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.இத்தகைய நியமனம் மூலம் குடிசார் நிர்வாகத்தை சிறிலங்கா அரசாங்கம் இராணுவமயமாக்குகிறது என்று திருமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் சி.எழிலன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரிடமும் எழிலன் தெரிவித் துள்ளார்.