மனிக்பாம் செல்ல அனுமதி மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உதவிகளை மேற்கொள்ள முடியாது -ஐ.சி.ஆர்.சி கவலை
இலங்கையில் வடபகுதியில் மோதல்களினர்ல இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள மனிக்பாம் முகாம்களுக்காக அனுமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது இதனால் அங்கு தமது உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது உணவு விநியோகம் செய்யும் அமைப்புக்கள் மட்டுமே மனிக்பாம் முகாம் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் இராணுவம் அண்மையில் அறிவித்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உணவு விநியோகம் செய்வதில்லை என்ற நிலையில் மனிக்பாம் சென்ற ஏனைய அவசர உதவிகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஜெனீவா பேச்சாளர் மாசல் இஷாட் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். மனிக்பாம் தவிர்ந்த ஏனைய முகாம்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் செல்லவழமைபோல் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating