பிரபாகரன் உட்பட 300 புலிகளின் உடல்கள் முல்லைத்தீவில் அடக்கம்..

Read Time:1 Minute, 18 Second

பிரபாகரன் உட்பட 300 புலிகளின் உடல்கள் இராணுவத்தினரால் முல்லைத்தீவு பிரதேசமொன்றில் வைத்து அடக்கம் செய்யப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். மோதல்கள் நிறைவுற்ற நிலையில் பிரபாகரன் மற்றும் புலிகளின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான புலி உறுப்பினர்களின் சடலங்கள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருந்தன. கைப்பற்றப்பட்ட சடலங்களுள் பல சடலங்கள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் அவற்றை அப்பகுதியிலேயே அடக்கம் செய்யவேண்டி ஏற்பட்டதால் பிரபாகரன் உள்ளிட்ட ஏனைய முக்கியஸ்தர்களினது சடலங்களும் அடக்கம் செய்யப்பட்டன. பிரபாகரன், அவரது மகன் சார்ள்ஸ் அன்ரனி, சூசை, பொட்டு அம்மான், நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலிகள் பலரின் சடலங்களும் முல்லைத்தீவில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

5 thoughts on “பிரபாகரன் உட்பட 300 புலிகளின் உடல்கள் முல்லைத்தீவில் அடக்கம்..

  1. புலிகளது சரி – தவறுகள் எதுவானாலும் பிரபாகரன் சடலத்தை புலிகளது ஆசீர்வாதத்தோடு வாழ்கை நடத்திய TNAயாவது(தமிழ் தேசிய கூட்டமைப்பு) பெற்று இறுதி மரியாதையை செய்திருக்கலாம்.
    முடியாது என்று யாராலும் சொல்ல முடியாது. சதாம் குசைன் சடலத்தை பெற்று இறுதி கிரிகைகளை செய்ய முடிந்தது. நமது இனத்தில் வாய்ச் சவடால் விட்ட எவருமே வாய் திறக்காதது ஏன்?
    இறந்தது பிரபாகரன் இல்லை என்றால் ,சடலத்தை பெற்று அது பிரபாகரனது இல்லை என்று உலகத்தின் முகத்தில் காட்டியிருக்கலாம்.
    அது அனைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடமையாக இருந்திருக்க வேண்டும். அவர் சாகவில்லை என்று அவரை அநாதையாக்கி எரிக்க சதிகாரர்களாக இருந்தவர்கள் துரோகிகளாகவே கருதுகிறே.
    பலரது சுயநல முகங்கள் இப்போது தெரிகின்றன

  2. தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது இருக்கைக்காக எதையும் செய்வார்கள்…
    தலைவர் செத்தா அவர்களுக்கு என்ன…. இப்பவே சில பேர் புலிகள் தமிழரின் ஏக பிரதிநிதி எண்டு தாம் ஒப்புக்கொள்ளவில்லைஎன பல்டி அடித்து விட்டார்கள்…

    இவர்களுக்கு சூடு சுரணை இருந்து இருந்தால் தமது தலைவர்களை கொன்ற புலிகளுடன் கூட்டு சேர்ந்து இருப்பார்களா?
    ஆகவே அவர்களை பற்றி பேசுவது எதுவித பலனையும் தராது…..

    உண்மையான மக்கள் தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஆதரிப்பதே சிறந்தது..

  3. இப்ப தெரியுதில்லே… பிரபா செத்துட்டான்னு…

    அடங்குடா!

Leave a Reply

Previous post நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் பூதவுடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்னம் அஞ்சலி
Next post ‘களேபர’ போஸ் – சர்ச்சையில் நீத்து!