பிரபாகரன் கொல்லப்பட்டதை விடுதலைப் புலிகள் சார்பாகப் பேசவல்லர் உறுதிப்படுத்தியுள்ளார்..

Read Time:1 Minute, 10 Second

ltteprababodyவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்பதை விடுதலைப் புலிகள் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்புடைய சர்வதேச உறவுகள் பிரிவின் தலைவராக அறியப்படும் செல்வராசா பத்மநாதன் கையொப்பமிட்டுள்ள அறிக்கை இது. பிபிசி தமிழோசைக்கு இவர் வழங்கிய ஓர் செவ்வியில், மே பதினேழாம் தேதி பிரபாகரன் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார் என்றாலும், அவர் எவ்வாறு இறந்தார் என்பது பற்றிய விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை. இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக வன்முறையற்ற வழிகளில் இனி விடுதலைப் புலிகள் போராடுவார்கள் என்றும் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

12 thoughts on “பிரபாகரன் கொல்லப்பட்டதை விடுதலைப் புலிகள் சார்பாகப் பேசவல்லர் உறுதிப்படுத்தியுள்ளார்..

  1. தன் வினை தன்னை சுடும் . அது போல இவர்களுக்கு நடந்துள்ளது…
    சந்தன கடத்தல் வீரப்பன் சரணடைய ஒப்புக்கொண்ட பின்னர், ராணுவம் தந்திரமாக சுட்டு கொன்றது. அது போல தான் நடந்து உள்ளது..
    சர்வதேச அனுசரணையுடன் புலித்தலைவர்கள் சரணடைந்த பின் தந்திரமாக சுட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்கள்…
    புலித்தலைவர்கள் இறுதி நேரத்தில் உயிர் பிச்சை வேண்டி எல்லா இடமும் கதைத்தது அம்பலமாகியுள்ளது…….

    வரலாற்றை பின் நோக்கி பார்த்தால்…..
    “கிட்டு எங்களுக்குள் இருக்கும் பிரசனைகளை நாம் பேசி தீர்போம்” என ரெலோ தலைவர் கோண்டாவில் குமரகோட்டத்தில் உள்ள குடிசை ஒன்றிற்கு வெளியே வைத்து உயிர் தஞ்சம் கோரிய போது புலிகளால் கோரமாக கொல்லப்பட்டார்..

    இது தான் நினைவுக்கு வருகிறது…..
    தன் வினை தன்னை சுடும். நாம் செய்ததே நமக்கு நடக்கும்.

    இனியாவது ஜனநாயக வழியில் தமிழரின் உரிமைகளை வென்று எடுப்போம்.

    ஆனாலும் , இந்த புலம் பெயர் தமிழரின் உண்மை நிலை புரியாத முட்டாள் தனமான போராட்டங்கள் , புலித்தலைவர்களுக்கு வினை வைத்தது..அதுவும் ஒரு காரணம். புலிகள் பலம் இழந்து விட்டார்கள், என்பதை உணர்ந்து வேறு வழிகளில் போராடியிருந்தால், சில புலி தலைவர்களையாவது காப்பாத்தி இருக்கலாம்,,,
    “வீ வான்ட் தமிழ் ஈழம்” “அவர் லீடர் பிரபகாரன்” எண்டு மட்டுமே கத்தி பலரது வெறுப்பை சம்பாதித்தார்களே தவிர அனுதாபத்தை அல்ல….

  2. தலைவரின் நிழலை கூட எதிரிகள் நெருங்க முடியாது.
    நம்புங்கள் நாளை தமிழ் ஈழம் பிறக்கும்
    தலைவர் உயிரோடுதான் இருக்கிறார்.
    தமிழர் பணத்தில் மில்லியன் கணக்கில் ஆயுதங்களை வாங்கியதாக கணக்கு காட்டி
    பின்னர் அந்த ஆயுதம் வந்ததாக சொல்லப்பட்ட வெறும் கப்பல்களை இலங்கை கடல் படைக்கு துப்பு கொடுத்து ஒன்றல்ல இரண்டல்ல பன்னிரண்டு ஆயுதம் கொண்டுவந்த கப்பல்களை கடலில் மூழ்கடித்து கள்ளக்கணக்கு காட்டி எத்தனையோ மில்லியன்களை களவாடிய எமது போராட்டத்திற்கே ஆப்பு வைத்த கேபீயை நம்ப வேண்டாம்.

  3. பிரபா செத்துப்போனான் எண்டு தெரிஞ்சும் எவ்வளவு அழகா றீல் விட்டான் கே.பி.
    தலைவர் உயிரோடு இருக்கிறார் என வெளிவிவகார புலனாய்வு பொறுப்பாளர் அறிவழகன் எண்டு ஒருத்தர், யாழ் செல்லும் படையணி தளபதி வெற்றிக்குமரன் எண்டு இன்னொருத்தர் எத்தனை பேரை உருவாக்கி பிரபா சாகேல்லை எண்டு பில்டப் குடுத்தான் கே.பி.

    அடே தமிழா… யாரடா துரோகி?
    தலைவன் எண்டு தலையில் வைத்துக் கூத்தாடிய பைத்தியக்காரப் புலன்பெயர் தமிழர்களே… நீங்கள்தான் பச்சைத் துரோகிகள்! ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூட உங்கள் தலைவனுக்காக விடமுடியாத முட்டாள்கள் நீங்கள்!
    (தலைவரோட நேரடித் தொடர்பிலை இருந்த கே.பி க்கு 7 நாள் கழிச்சுத்தான் தெரியுதோ செத்துட்டான்னு?)

    இப்ப மட்டும் என்ன?
    யமலோகம் செல்லும் படையணி தளபதியா சொன்னான்… பிரபா செத்துட்டான்னு?

    போங்கடா…! நீங்களும் உங்கட தலைவனும்…

  4. ஐயா விஜய்…அப்ப யாரை நம்ப சொல்லுறீர்….?
    ஒரு நேரத்தில் தலைவர் துரோகி அவரை நம்ப வேண்டாம் எண்டு சொன்னாலும் சொல்லுவியள்…..

  5. பிரபாகரனால் நியமிக்கப்பட்டவரின் கூற்றையே ஏற்கமுடியாத புலி தமிழர்கள், எவ்வாறு அவரது தலைமையை ஏற்று தமிழினத்தின் உரிமைக்காக போராட போகின்றனர். இவர்களை சொல்லி குற்றமில்லை பிரபாகரன் உயிருடன் இருக்கும்வரை இவர்களை மந்தைகள் போலத்தான் வளர்த்தார் என்பதற்கு இவையே சான்று.

  6. கருணா தலைமையிலான ஆயுததாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த விரும்புவதாகவும், அவர்களுடன் தாமும் இணைந்த செயற்பட விரும்புவதாகவும் திட்டமிட்டு பிரபாகரனால் கிழக்கிற்கு அனுப்பப்பட்ட ஆயுததாரிகள் வெள்ளைக் கொடியினை எந்தியவாறு கருணா தரப்பினருடன் இணைவதாக நாடகமாடி வெருகல், கதிரவெளி ஆகிய கிராமங்களில் நிலைகொண்டிருந்த 310 இளைஞர்களையும், யுவதிகளையும் 10.04.2004 ந் திகதியன்று தெரு நாய்கள்போன்று ஒரே நாளில் சுட்டுக்கொன்றனர், அவர்களை சுட்டுக்கொன்றது மட்டுமன்றி அவர்களின் உடல்களை அடக்கம் செய்யவிடாது நாய்கள், நரிகள், காக்கைகள் போன்ற பிராணிகளும் பறவைகளும் உண்பதற்கு வழியமைத்தனர்.

  7. எல்லாளன்; துட்டகைமுனுவால் வெற்றி கொள்ளப்பட்டபோது எல்லாமக்களையும் அழைத்த மரணச்சடங்கினை துட்டகைமுனு செய்ததாகவும், எல்லாளனுடைய சமாதியைத் தாண்டிச் செல்லும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தங்களது தொப்பிகளையும் , பாதணிகளையும் நீக்கவேண்டுமென்றும் ஒரு கௌரவத்தினை ஏற்படுத்தினார். ஆனால் இன்று பிரபாகரனுடைய மரணத்திற்கு இன்றைய துட்டகைமுனு வழங்கினாரா? என்ற வினாவிற்கான விடை எல்லோருக்கும் தெரிந்ததே! ஏனெனில் எல்லாளன் பயங்கரவாதியல்ல, சகல மக்களையும் நேசித்த சகல மக்களும் நேசித்த மன்னன்.

  8. துஸ்டகைமுனுவும் போர்விதியை மீறித்தான்

    எல்லாளனை வென்றான்,அதேபோல் தான்

    ராஐபக்சவும் நடந்து கொண்டான். பேடிச் சிங்களவன்.

  9. ஆமா.. புலிகள் மட்டும் போர் விதி முறைகளை கடை பிடித்தார்கள்..
    ஏன் என்றால் அவங்கள் ரொம்ப நல்லவங்க……

    பெண்ணின் மார்புக்குள் குண்டு கட்டி அனுப்பி , போர் விதிமுறைகளுக்கு உட்பட்டே போர் செய்தார்கள்….
    ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்….

    அவங்க ரொம்ப நல்லவங்க… சிங்கள வெறியர்கள் தந்திரமாக போர் விதிமுறைக்கு எதிராக புலிகளை விழுத்தி விட்டார்கள்…
    இல்லாட்டி அவர்களால் ஒரு மயிரையும் புடுங்க முடியாது….

    நம்பினால் நம்புங்கள், நியாயமான ஒரு போர் நடந்து இருந்து இருந்தால், இப்ப புலிகளின் நிழலை கூட இவங்களால் நெருங்கி இருக்க முடியாது…..

    அட தமிழா…. உனக்கு நீயே சமாதானம் சொல்லிக்கொண்டு சுய இன்பத்திலேயே இரு…… உலகம் எங்கோ போய் விடும்…

Leave a Reply

Previous post கிளிநொச்சி, முல்லைத்தீவில் புதிய இராணுவத் தளங்கள்..
Next post Prabhakaran got it all wrong in his last interview! -EXCLUSIVE