மோதல்களில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள வேண்டும்: கனடா

Read Time:1 Minute, 23 Second

மோதல்களில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளையும், தொண்டு நிறுவனப் பணியாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவேண்டுமென இலங்கை அரசாங்கத்திடம், கனடிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் சர்வதேச அமைச்சர் ஆகியோர் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். சர்வதேச மனிதாபிமான விழுமியங்களுக்கமைய, இலங்கை அரசாங்கம் செயற்படவேண்டுமெனவும் அவர்கள் குறிப்பிட்டனர். முகாம்களில் தங்கியிருக்கும் பொதுமக்களுக்கு நடமாடுவதற்கான சுதந்திரம் வழங்கப்படவேண்டுமென்பதுடன், இந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதியளிக்க வேண்டுமெனவும் கனடிய அமைச்சர்கள் கூறியுள்ளனர். அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய அரசியல் நல்லிணக்கம் காணப்படுமென்ற இலங்கை ஜனாதிபதியின் வாக்குறுதிக்கு உடனடியாக செயல்வடிவம் கொடுக்க வேண்டுமெனவும் கனடிய அமைச்சர் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “மோதல்களில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள வேண்டும்: கனடா

  1. முதன் முதலில் சுயாட்சிக் கழக நவரட்னம் தமிழீழ கோரிக்கையை முன்வைத்தார்.அப்போது மக்கள் அவரையும் அவருடைய தீர்வையும் ஏற்றுக்கொள்ளவில்லை.அப்போது இந்த தனிநாட்டு தீர்வை அமிர்தலிங்கம் “தற்கொலைக்கு ஒப்பான தீர்வு”என்றார். இந்த இடைக்கால கட்டத்தில் அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் ஜி.ஜி.பொன்னம்பலம் போன்றோர் தேர்தலில் தோற்றதைத் தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை. அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் தமது தேர்தல் சுயநல அரசியலுக்காகவே தமிழீழ தனிநாட்டு தீர்வை முன்வைத்தார்கள் என்பது உணர முடிகிறது.
    1977 ம் ஆண்டு யூலை மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலின்போது தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியினர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமது வேட்பாளர்களை நிறுத்தியபோதும் அக்கோரிக்கை தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த 878,143 தமிழ் வாக்காளர்களில் 394,992 வாக்காளர்கள் மட்டுமே தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு வாக்களித்தனர். இத்தொகை மொத்த தமிழ் வாக்காளர்களில் 45% வாக்காளர்கள் மட்டுமே தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு வாக்களித்தனர். ஒரு தனி இறைமை பெற்ற நாட்டினுள் இன்னொரு நாட்டினை அமைப்பதானால் குறைந்தபட்சம் 67% மக்களின் ஆதரவு பெறவேண்டியது நியதியாகும். வட்டுக்கோட்டை தனி அரசு பிரகடனப் பாதை, ஒரு பிடி சோற்றுக்கும், திறந்த வெளிச் சிறை வாழ்வுக்கும், நிவாரணத்தில் தங்கி வாழ்வதற்கும், நாடோடியாக அகதியாக அலைவதற்கும் வித்திட்டது.
    தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வடக்குகிழக்கில் இருந்த மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் நாட்டைவிட்டு நிரந்தரமாக வெளியேறிவிட்டார்கள். இன்னுமொரு மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் நிரந்தரமாக தெற்கில் குடியேறிவிட்டார்கள். வடக்கு கிழக்கில் மூன்றில் ஒரு பங்கு தமிழர்களே உள்ளனர். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை என்பது தமிழ் மக்களின் சகல ஜனநாயக உரிமைகளையும் உள்ளடக்கியது. தனி மனிதனின் கருத்து சுதந்திரம் பெண்களின் உரிமைகள் சிறார்களின் உரிமைகள் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்கள் தொழிற்சங்க உரிமைகள் கருத்து வேறுபாடுகளுக்கும் உடன்பாடுகளுக்குமான இடைவெளிகள் இவற்றை நிராகரிப்பதாக இவற்றுடன் முரண்படுவதாக இனங்களின் சுயநிர்ணய உரிமை இருக்க முடியாது.
    சுயநிர்ணயம், சுயாட்சி, சமஸ்டி போன்ற கோட்பாடுகள், இலங்கையைப் பொறுத்தவரையில், சிங்கள – தமிழ் இனவாதிகளால் மக்கள் மத்தியில் அச்சமூட்டும் விடயங்களாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சமஸ்டி பற்றி பேசிய தமிழரசுக்கட்சியாலும், பின்னர் அதை பிரிவினைவாதமாக மாற்றிய தமிழர் விடுதலைக்கூட்டணியாலும், அதையே அடிப்படையாக வைத்து பிரிவினைவாத யுத்தம் நடாத்திய புலிகளினாலும், அந்த கோட்பாடுகள் சிங்களமக்கள் மத்தியில் பிரிவினைவாத தத்துவமாக விளங்கவைக்கப்பட்டுள்ளது. எனவே தமிழர்கள் பிரிவினையை கோரி நிற்கவில்லை என்பதை நடைமுறையில் நிரூபிக்கும் வகையிலான இடைக்கால தீர்வொன்றை நடைமுறைப்படுத்துவது அவசியம்.

Leave a Reply

Previous post இந்தியா தர மறுத்ததாலேயே சீனாவிடம் ஆயுதக் கொள்வனவு: சரத் பொன்சேகா
Next post இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ விரும்பும் நாடுகள் ஐ.நாவின் சீ.ஆர்.ஏ.பி என்னும் அமைப்பினூடாக அத்தியாவசியப் பொருட்கள், கூடாரங்கள், என்பவற்றை வழங்க முன்வர வேண்டும் -ஐ.நா செயலர்