முகாமிற்குள் கைத்தொலைபேசி விற்பனை, வெளியில் எடுப்பதாக கூறி பணம் பெறுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் 09பேர் கைது!!
வன்னியில் இடம்பெற்று வந்த கடும் மோதல்களின் காரணமாக தமது உயிர்களை மட்டும் காப்பாற்றிக் கொண்டு உடுத்த உடையுடன் இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா நலன்புரி நிலையங்களிலும், நிவாரணக் கிராமங்களிலும் இலட்சக்கணக்கான மக்கள் தங்கியிருப்பது தெரிந்ததே. இவ்வாறு நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களை வெளியில் எடுத்து விடுவதாகக் கூறி பணம் பெறும் நடவடிக்கையிலும், நலன்புரி முகாமிற்குள் சென்று குறைந்த விலையிலான கைத்தொலைபேசிகளை கொள்ளை இலாபம் பெறும் நோக்குடன் கூடிய விலைக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையிலும் தொடர்ச்சியாக சிலர் ஈடுபட்டு வருகின்றமையும் தெரிந்ததே. இவ்வாறான விடயங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டின்பேரில் ஈ.பி.டி.பி அமைப்பின் உறுப்பினராகிய ஊத்தை ரவி என்பவர் உட்பட ஒன்பது ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் வவுனியா பொலீசாரினால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியாவிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
8 thoughts on “முகாமிற்குள் கைத்தொலைபேசி விற்பனை, வெளியில் எடுப்பதாக கூறி பணம் பெறுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் 09பேர் கைது!!”
Leave a Reply
You must be logged in to post a comment.
இதைத்தானே மாற்றுக் கருத்துடையவர்கள்
விரும்பினார்கள்? இன்னும் பல காட்சிகள்
இதைப்போல் அரங்கேறும்.
கதை,வசனம்,டைரக்சன்… –”’ தமிழ்த்துரோகி” –
தமிழன் என்று சொல்லுடா! துரோகி என்று நில்லடா!!!
தமிழனுக்கு எதிரி என்றுமே தமிழன் தான். ஒற்றுமையாக இருந்திருந்தால் உலகையே ஆண்டிருக்க வேண்டிய இனம். ஒற்றுமை இன்றி ஒருவரை அழிக்க துணைப் போய் துரோகிகளாக, துப்பு கெட்டவர்களாக சுயநலக் கிருமிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவலம்.
எந்த இனமும் அடிமை வாழ்க்கை வாழ விரும்புவது இல்லை. யூதர்களைப் போல ஈழத்தமிழ் இனமும் ஒரு நாள் மீண்டு வரும். அந்த வரலாற்றில் நிச்சயம் நமக்கு ஒரு இடம் இருக்கும். இவர்கள் துரோகிகள் என்று.
இந்த துரோகிகள் உருவாக காரணமானவர்கள் இன்னும் தமிழரின் ஏக பிரதிநிதிகள் எண்டு சொல்லிக்கொண்டு வலம் வருவது தான் வேடிக்கை,,,
ஒற்றுமையாக இருந்திருந்தால் உலகையே ஆண்டிருக்க வேண்டிய இனம்..
ரொம்ப சரி…. ஆனால் யார் இந்த ஒற்றுமையை குலைத்தது? யார் இந்த துரோகிகளை உருவாக்கியது?
புலிகளுக்கு எதிரி எண்டால் அவர்கள் துரோகிகளா?
மக்களுக்கு என்ன துரோகம் செய்தார்கள்?
துரோகத்தின் மொத்த உருவமும் புலிகள் தான்… இப்ப பேசி பிரயோசனம் இல்லை…
மக்களை மீள் குடியேற்றும் முயற்சியில் இறங்குவோம்…
அழிந்து போன புலிகளை பற்றி பேசி நேரத்தை வீனடிக்க வேண்டாம்….
துரோகிகள் உருவாக்கப்படுவதில்லை அது
பிறவிக்குணம். அது சந்தர்ப்பம் வரும் வரை
காத்திருந்து காலை வாரிவிடும். மாத்தையா ,
கருணா , இன்னும் ………..
Appa, what are they doing? They can against for LTTE, but they are against all Tamil, not Singalavan.
Can you agaisnst this statement
இன்னும் யாரோ…?
இப்போ கேபி …. நாளை?
excuse me mister eelamagan. yootharkalai pol meendu tamilinam varavendumenral yoothargal arabigalai ematriyadu pol tamilargal yaarai ematra vendum???