யாழ்.நாவாந்துறையில் ஈ.பி.டி.பியைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை
Read Time:48 Second
யாழ். நாவாந்துறைப் பகுதியில் ஈ.பி.டி.பி aைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சென் அன்ரனீஸ் தேவாலயத்திற்கு முன்பாக வைத்து இன்று திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் அவர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தின் போது அதே பகுதியைச் சேர்ந்த ஜேசுராசா (வயது 45) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நபர் முன்னர் ஈ.பி.டி.பிவில் இயங்கியவர் என்றும் கூறப்படுகிறது.