புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஓடுபாதைகளில் விரைவில் விமானத்தளங்கள் அமைக்கப்படும்..
Read Time:1 Minute, 25 Second
முல்லைத்தீவு மற்றம் இரணைமடுப்பகுதிகளில் விடுதலைப்புலிகளிடம் இருந்துகைப்பற்றப்பட்ட விமான ஓடுபாதைகள் தமது தேவைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் விமானப்படையினர் பயன்படுத்தவுள்ளனர் என விமானப்படைப்பேச்சாளர் விங்கொமாண்டர் ஜனக நாணயக்கார இத்தகவலை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவுக்கு சமீபமாக அமைந்துள்ள பெரிய விமான ஓடுபாதை விரைவில் அபிவிருத்திசெய்யப்பட்டு விமானத்தளமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கிளிநொச்சியில் ஏ9பாதைக்கு கிழக்கே இரணைமடுவில் அமைந்துள்ள விமான ஓடுபாதையை பயன்படுத்தி அங்கு சிறிய விமானத்தளம் ஒன்று அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவி;த்தார். வடக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின்போது விடுதலைப்புலிகளின் ஏழுவிமான ஓடுபாதைகள் கைப்பற்றப்பட்டிருந்தன என்றும் விமானப்படைப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
Average Rating