அகதி அந்தஸ்து வழங்கப்படாதோர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப் படவேண்டும்: சுவிஸ்
Read Time:59 Second
அகதி அந்தஸ்து வழங்கப்படாதவர்கள மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட வேண்டுமென சுவிட்சர்லாந்து செனட் சபை இன்று தீர்மானித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் ஏற்கனவே பெருந் தொகையான இலங்கைத் தமிழ் அகதிகள் அடைக்கலம் புகுந்துள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் மே மாதம் 15ம் திகதி வரையில் 662 இலங்கைத் தமிழ் அகதிகள் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சகல விண்ணப்பங்களும் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு மட்டும் அகதி அந்தஸ்து வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating