ஆற்றில் ஒதுங்கிய ஆணின் சடலம் மீட்பு
Read Time:1 Minute, 12 Second
அக்கரப்பத்தனை நியுபோர்ட்மோர் தோட்டம் கொத்மலை ஓயா ஆற்றில் கரை ஒதுங்கிய 50வயது மதிக்கதக்க ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டள்ளது. நேற்றுப்பகல் பிரதேச மக்களும் அக்கரைப்பத்தனை பொலிஸாரும் இதனை மீட்n;டடுத்துள்ளனர் அக்கரைப்பத்தனை உருளவள்ளித் தோட்டத்தைச்சேர்ந்த அருணாச்சலம் பரமசிவம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அக்கரைப்பத்தனை பிரதேசத்தில் சிலநாட்களாக பெய்த அடைமழையினால் கொத்மலை ஓயா பெருக்கெடுத்த போது மரணமானநபர் ஆற்றில் விழுந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating