கொழும்பில் துப்பாக்கிச் சூடு இளம் தமிழ் வர்த்தகர் படுகாயம்..!

Read Time:1 Minute, 25 Second

கொழும்பு புதுச்செட்டித் தெருவில் நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் தமிழ் இளம் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர் சம்பவத்தில் படுகாயமடைந்தவர் சற்குணராஜா விமலன் (வயது 26) எனவும் அவர் மீது அவரது வீட்டிற்கு அருகிலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் ஆட்டோ ஒன்றில் வந்தவர்களே துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருப்பதாகவும் சம்பவத்தில் கைத்துப்பாக்கி ஒன்றே பயன்படுத்தப்பட்டதாகவும் இவர் தெரிவித்தார் சம்பவத்தில் படுகாயமடைந்த தமிழ் வர்த்தகர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பாக கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆற்றில் ஒதுங்கிய ஆணின் சடலம் மீட்பு
Next post வாழைச்சேனை ஓட்டமாவடியில் இருந்து வங்காள விரிகுடா கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்களைக் காணவில்லை