ஐ.நா மனித உரிமைக்குழுவால் இலங்கைக்கு எவ்வித அழுத்தங்களும் விடுக்கப்படவில்லை -அமைச்சர் விஸ்வ வர்ணபால
Read Time:1 Minute, 20 Second
ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான உரிமைகள் ஆணைக்குழுவினால் இலங்கைக்கு எவ்வித அழுத்தங்களும் விடுக்கப்படவில்லையென்று உயர்கல்வியமைச்சர் விஸ்வ வர்ணபால இன்று தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான உரிமைகள் ஆணைக்குழுவில் இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளமை தொடர்பாக ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை தொடர்பாக சில நாடுகள் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு வருவதுடன், உலகின் முக்கிய நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சீனா, இந்தியா, ரஸ்யா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்க தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளதாகவும் உயர்கல்வியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating