அம்பாந்தோட்டையில் 304டெங்கு நோயாளர்கள்
Read Time:1 Minute, 11 Second
அம்பாந்தோட்டையில் டெங்குநோயாளர்கள் 304பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை இவ்வருடத்தில் மாத்திரம் 70டெங்கு நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இருவாரகாலமாக பெய்துவரும் அடைமழை காரணமாக டெங்கு நுளம்பு வேகமாக பெருகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் பல பாகங்களிலும் டெங்குகாய்ச்சல் தொற்றுநோயாக வேகமாக பரவிவருவதாக தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது டெங்குநோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் சுகாதார அமைச்சு ஈடுபட்டுள்ளது பொதுமக்கள் சுற்றுப்புறத்தை துப்பரவு செய்து டெங்குநுளம்பு பெருகுவதை கட்டுப்படுத்துமாறு சுகாதாரஅமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Average Rating