விடுதலைப்புலிகளினால் கொரில்லா முறையில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் -சரத்பொன்சேகா
Read Time:1 Minute, 17 Second
பதுங்கியுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் கொரில்லா முறையிலான தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடுமென இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார். எவ்வாறெனினும் விடுதலைப் புலிகளினால் இனியொருபோதும் பலமான ஓர் இராணுவ அலகாக உருப்பெற முடியாதென அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைத்தலைவர்களை இல்லாதொழித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் படைவீரர்களை கௌரவப்படுத்தும் வகையில் இடம்பெற்ற நகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத்தெரிவித்துள்ளார் சிலவேளைகளில் சிறு சிறு தாக்குதல்களை புலிகள் மேற்கொள்ளக் கூடும் எனவும் இராணுவரீதியாக புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Average Rating