அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு
Read Time:1 Minute, 17 Second
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹெத்சூலர் தலைமையிலான குழுவினர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபப்ஷவை சந்தித்து உரையாடினர் இச்சந்திப்பு நேற்று காலை அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது வடக்கில் விடுவிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்கும் அமெரிக்கா உதவத்தயார் என ஜனாதிபதியிடம் தூதுக்குழுவினர் இச்சந்திப்பின்போது உறுதியளித்தனர். வடபகுதி நிவாரணக்கிராமங்களுக்கு விஜயம் செய்த இத்தூதுக்குழுவினர் இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள வசதிகளை நேரில் கண்டறிந்தனர் சர்வதேச ஊடகங்கள் கூறியவாறு பாரிய குறைபாடுகள் இந்த நிவாரண கிராமங்களில் காணப்படவில்லை என்றும் தூதுக்குழுவினர் ஜனாதிபதியிடம் கூறியதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Average Rating