வாழைச்சேனையில் இளம் குடும்பஸ்தர் கடத்தல்
Read Time:1 Minute, 14 Second
மட்டக்களப்பு வாழைச்சேனையில் நேற்று முன்தினமிரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் வீட்டிலிருந்து வேளையில் சிலரால் கடத்தப்பட்டுள்ளார். இரு பிள்ளைகளின் தந்தையான பொண்வண்டு வீதியைச் சேர்ந்த 38வயதுடைய சந்திரேசன் வரதராஜன் என்பவரே கடத்தப்பட்டுள்ளார். சம்பவ இரவு 9.15அளவில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வீட்டில் இருந்தவேளை வீட்டின் முன்பாக கறுப்புநிற பிக்கப்பில் வந்தவர்கள் இவரை விசாரணைக்கென கூறி அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பொலநறுவைப் பொலீசார் என கூறியே வீட்டின் கேட்டை திறக்குமுன் மதில் ஏறி குதித்து இவரை அழைத்துச் சென்றதாகவும் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர். பின்னர் அவர்பற்றி தகவலில்லை என்றும் இது பற்றி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Average Rating