வட்டுக்கோட்டையில் இருவர் சுட்டுக்கொலை

Read Time:1 Minute, 20 Second

வட்டுக்கோட்டை மூளாய் வீதியில் மாவடிக்கு சமீபமாக தொலைத்தொடர்பகம் ஒன்றிற்குள் நேற்று (28.05.2006) பிற்பகல் 5.00 மணியளவில் உள்நுழைந்த ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானார் மற்றொருவர் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்தார்.

வட்டு காளிகோவிலடியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் சபேசன் (வயது 26) என்பவர் சம்பவம் இடம்பெற்ற கிருஷ்ணா தொலைதொடர்பகத்தில் தொலைபேசி எடு;ப்பதற்காக சென்றிருந்த வேளை அங்கு வந்த ஆயுததாரிகள் அவரை சுட்டுக்கொன்றனர். அவரது கைகளையும், கண்ணையும் கட்டியபின்னரே துப்பாக்கிச் சூட்டை நடாத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. தொலைத்தொடர்பு நிலைய உரிமையாளரான விமலசூரியர் கோகுலராஜ் (வயது 23) சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு மரணமானார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நாவாந்துறையில் முன்னாள் மாநகரசபை ஈபிடிபி உறுப்பினர் புலிகளால் சுட்டுக்கொலை
Next post ஓமடியாமடுவில் 13பேர் சுட்டுக்கொலை