ஜனவரி அல்லது பெப்ரவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல்
எதிhவரும் எதிர்வரும் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதத்தில் அநேகமாக ஜனாதிபதித் தேர்தலை நடாத்த ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தற்போதுள்ள மக்கள் செல்வாக்கை உச்ச அளவில் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் தேர்தல்களை முன்கூட்டியே நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை அரசியல் சாசனத்தின்படி பதவிப் பிரமாணம் மேற்கொண்டு நான்கு ஆண்டுகள் பூர்த்தியானதன் பின்னர் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை நடாத்த முடியும். யுத்த வெற்றி மூலம் ஆளும் கட்சி அடைந்துள்ள நன்மதிப்பை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் பதவிக் காலம் முடிவடைவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்னதாகவே தேர்தலை நடாத்த ஜனாதிபதி உத்தேசித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் கிடைக்கப் பெறும் பெறுபேறுகளைக் கருத்திற் கொண்டு விரைவில் பாராளுமன்றத் தேர்தலும் நடாத்தப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது.
Average Rating