குழந்தையை திருடிய இருவர் கைது பெற்றோரைத் தேடும் பணியில் பொலிஸார்

Read Time:2 Minute, 13 Second

18மாதக் குழந்தையொன்றை 50ஆயிரம் ரூபாவுக்கு விற்க முயன்ற இரு நபர்களைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். சிலாபம் பொலிஸாரே இவ்வாறு குழந்தையின் பெற்றோரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் குருணாகல் வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இரு நபர்களுக்கு இடையில் நிகழ்ந்த வாக்குவாதத்தை அவதானித்த பின்னர் இந்த இருவரையும் கைது செய்த போதே குழந்தை விற்பனை தொடர்பாக விவகாரம் தெரிய வந்துள்ளது என சிலாபம் பொலி;ஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் பி.மல்தெனிய தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் குழந்தை பலவீனமாக இருப்பதால் வைத்திய பராமரிப்பு அவசியப்படுகிறது சிலாபம் வைத்தியசாலையில் குழந்தையின் தாயார் சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாக சந்தேகநபர்கள் கூறியுள்ள போதும் அந்த தாயை கண்டுபிடிக்க பொலிஸாரால் முடியாதுள்ளது. ஏனெனில் விசாரணைகள் மூலம் அப்படி ஒரு பெண் இல்லையென வைத்தியசாலை அதிகாரிகள் கூறியுள்ளமை தெரிய வந்துள்ளது. குழந்தை பெண் பொலிஸ் காண்ஸ்டபிள்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது சந்தேகநபர்கள் நீதிமன்றில் நிறுத்தப்படுவார்கள் என்றார். இதேவேளை இதுபோன்ற ஒரு சம்பவம் காலியில் நடந்துள்ளது தன் குழந்தையை 10ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற தாய் ஒருவரையும் அந்த விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட நால்வரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிகிரியா குளவித் தாக்குதல்..
Next post மட்டக்களப்பில் எலும்புக்கூடுகள் மீட்பு…