மட்டக்களப்பில் தமிழ் பொலிஸார் புலிகளால் சுட்டுக்கொலை
Read Time:1 Minute, 3 Second
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு அருகே பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர், நேற்றிரவு 7.10 மணியளவில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சண்முகம் கண்ணதாசன் (வயது 38) என்னும் பொலிஸ் கான்ஸ்டபிளே சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.
இவர் நேற்றிரவு கல்லடி பாலத்திற்கருகில் உள்ள காவலரணில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவிட்டு, இரவு உணவை உண்பதற்காக கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தண்ணீர் எடுப்பதற்காக சென்ற போதே இவர் மீது புலிகள் துப்பாக்கியால் சுட்டுவிட்டுச் சென்றுள்ளனர் என மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.