5வருடங்களுக்கு முன் காணாமற்போன தாண்டவன்வெளி வர்த்தகரின் சடலம் மீட்பு!!
Read Time:1 Minute, 7 Second
மட்டக்களப்பு தாண்டவன் வெளியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் சடலம் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. 5வருடங்களுக்கு முன் காணாமற்போன ஒருவரின் சடலமே புதைக்கப்பட்ட நிலையில் மனித எச்சங்களாக தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. இம்மனித எச்சங்கள் மட்டக்களப்பு கல்லடி காளிகோவில்வீதியில் அமைந்துள்ள தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான வெற்றுக்காணியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. 5வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன 43வயதுடைய அமிர்தலிங்கம் என்பவருடையதே இந்த எச்சங்கள் என்று பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மனித எச்சங்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating