வாஸ்குணவர்தனவின் மகனை எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியல் வைக்க உத்தரவு
Read Time:1 Minute, 17 Second
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வாஸ் குணவர்தனவின் புதல்வர் ரவிந்து குணவர்தனவை எதிர்வரும் 31ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது மாலம்பே தகவல் தொழில்நுட்பக்கல்லூரியை சேர்ந்த சக மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக ரவிந்து காணப்படுகிறார் பொலிஸ் அதிகாரிகளை கொண்டு நிபுண ராமநாயக்க என்ற மாணவனை கடத்திச்சென்று தாக்கியதாக ரவிந்து குணவர்தன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ரவிந்து குணவர்தன நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் இதேவேளை வாஸ்குணவர்தனவின் மனைவியையும் கைது செய்யமாறு நீதிமன்றம் கோரியுள்ளதாக தெரியவருகிறது.
Average Rating