யுவதியிடம் பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த பொலீஸ் அதிகாரி கைது

Read Time:1 Minute, 44 Second

பொலீஸ் நிலையத்தில் வைத்து யுவதியொருவரிடம் பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த பொலீஸ் அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு அவிசாவளைப் பொலீஸ் நிலையத்தில் பொதுமக்களின் முறைப்பாடுகளைப் பதிவுசெய்யும் பிரிவில் கடமையாற்றும் பொலீஸ் அதிகாரியே இவ்வாறு கைதாகிப் பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்வதற்காக அவிசாவளைப் பொலீஸ் நிலையத்திற்கு கடந்த 13ம் திகதி சென்றிருந்தார். அங்கு குறிப்பிட்ட பொலீஸ் அதிகாரி அவரிடம் தவறான முறையில் நடக்க முயற்சித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. மறுநாள் குறித்த யுவதி அவிசாவளைப் பொலீஸ் நிலையத்தின் பொலீஸ் அத்தியட்சகருக்கு குறித்த சேட்டை தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்துபெண்ணுடன் தவறான முறையில் நடக்க முயற்சித்தார் என்ற முறைப்பாட்டின் பேரில் குறித்த அதிகாரி பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கனேடிய தமிழ் மாணவர் சங்கத்தின் தலைவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்..
Next post இடம்பெயர்ந்தோரை அடைமழைக்கு முன்னர் மீள் குடியேற்ற துரித நடவடிக்கை