இந்திய வம்சாவளி மக்களின் 20வது சர்வதேவ மாநாட்டில் அமைச்சர் பெ.சந்திரசேகரன் உரை
Read Time:1 Minute, 16 Second
இந்திய வம்சாவளி மக்களின் பூலோக அமைப்பின் 20வது சர்வதேவ மாநாடு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இன்றையதினம் ஆரம்பமாகி எதிர்வரும் 23ம் திகதிவரையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைச்சர் பெ.சந்திரசேகரன் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இந்த நிகழ்வில் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங் கலந்து கொண்டு உரையாற்றும்போது இந்திய வம்சாவளி மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதில் இந்தியா முன்நிற்குமென்று குறிப்பிட்டுள்ளார். நியூயோர்க்கிலுள்ள இந்திய வம்சாவளி மக்களால் கடந்த 1989ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சர்வதேச அமைப்பு இருபது வருட பூர்த்தியை முன்னிட்டு பல நிகழ்வுகளை எதிர்வரும் தினங்களில் நடத்தவுள்ளது.
Average Rating