வெள்ளைமணலையும் கிண்ணியாவையும் இணைக்கும் பாலத்தின் நிர்மாணப்பணிகள் இறுதிக்கட்டத்தில்..
Read Time:1 Minute, 14 Second
திருமலைப் பிரதேசத்தில் வெள்ளைமணலையும் கிண்ணியாவையும் இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுவரும் பாலத்தின் நிர்மாணப்பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நிர்மாணிக்கப்பட்டுவரும் இந்தப்பாலம் சவூதி அரேபிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பாலம் எதிர்வரம் அக்டோபர் மாதத்தில் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. அத்துடன் மூதூர், தோப்பூர், கிண்ணியா போன்ற பிரதேச மக்கள் இந்தப் பாலத்தின் ஊடாக தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென்று தெரிவிக்கப்படுகின்றது. அமைக்கப்பட்டுவரும் கிண்ணியா வெள்ளைமணல் பாலமான இலங்கையில் மிகவும் நீளமானமென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Average Rating