புலம்பெயர்ந்தோர் ஒக்டோபர் 2ம்திகதி நடத்தும் பொதுக்கூட்டம்
Read Time:1 Minute, 22 Second
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தோர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ம் திகதி பொதுக்கூட்டமொன்றினை நடத்தவுள்ளனர். இதன்போது இலங்கையின் சமாதானம், இணக்கப்பாடு மற்றும் அரசியல் யோசனை தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் சமாதான மற்றும் இணக்கத்திற்கான கூட்டமைப்பே இந்தப் பொதுக்கூட்டத்தை நடத்தவுள்ளது. இக்கூட்டத்தில் தமிழ், சிங்களம், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், பிரித்தானிய நாடாளுமன்;றத்தை சேர்ந்தவர்களும் உரையாற்றவுள்ளனர். இக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இலங்கையர்கள் தொடர்பில் சர்வதேச பிரச்சாரத்தை மேற்கொள்ளல், சமூக செய்தித்துறை தளமொன்றை உருவாக்குதல், புலம்பெயர்ந்த இளைஞர்கள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்துதல் என்பனவும் இதில் கவனிக்கப்படவுள்ளன.
Average Rating